Jul 7, 2026 - 11:19 PM -
0
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து அந்த திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், சுங்க வரி செலுத்தாமலும் சுங்க அனுமதி பெறாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களை, மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, திணைக்களத்தின் கணினி தரவு அமைப்பில் உள்ளீடு செய்துள்ளார்.
பின்னர் சட்டவிரோதமான முறையில் அதனைப் பரிமாற்றம் செய்து, முறைகேடாகப் பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கு துணை நின்று ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபரை ஹோமாகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
