Header Logo
Mogo Academy

செய்திகள்
உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு

Jul 8, 2026 - 09:47 AM -

0

உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் வெலிக்கடைக்கு
Mobitel inner

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள் இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன. 

குறித்த அதிகாரிகளுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. 

கடந்த 6 ஆம் திகதி காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் 7 பேர் உயிரிழந்தனர். 

சிறைக்கைதிகளின் கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகியே அவர்கள் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை தணிவடைந்த பின்னர், சிறைச்சாலை அதிகாரிகள் அதற்கு அடுத்த நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதிகளுக்கு உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர். 

அச்சமயத்தில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீதும் கற்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அவ்வேளையில் பல்லன்சேன சிறைச்சாலைக்கு புதிய நியமனம் பெற்று வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு வருகை தந்திருந்ததுடன், அவர் மீதும் கைதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டு கைதிகள் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எவ்வாறாயினும், இந்த மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 


MOST READ

காணொளி
இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

ரவிக்கரன் வலியுறுத்தல்!

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் கவனம் செலுத்தவில்லை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

வறுமையால் தான் தவறுகள் இடம்பெறுகின்றன!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

பாராளுமன்றில் ரிஷாட் பதியுதீன் அதிரடி!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

தொல்லியல் திணைக்களம் இனவாத ரீதியில் செயற்படவில்லை!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

அல்-குர்ஆன் முஸ்லிம்களுக்குச் சாதாரண நூல் கிடையாது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

தொல்லியல் திணைக்களம் முழு நாட்டிற்குமானது!

Mobitel Upahara