Jul 8, 2026 - 12:25 PM -
0
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய சுகீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (08) நிராகரித்துள்ளது.
இந்தச் சந்தேகநபருக்கு பிணை வழங்குமளவிற்கு விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படாததால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டார்.
இதற்கமைய, சந்தேகநபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்குமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
