Header Logo
Mogo Academy

பல்சுவை
வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது தெரியுமா?

Jul 8, 2026 - 04:59 PM -

0

வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது தெரியுமா?
Mobitel inner

வாழைப்பழம் ஏன் நேராக இல்லாமல் வளைந்து இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது சாதாரணமாக நடந்த மாற்றமல்ல. 

இதற்கு பின்னால் மிகவும் சுவாரஸ்யமான அறிவியல் காரணம் உள்ளது..பலரும் நினைப்பது போல வாழைப்பழம் ஆரம்பத்திலிருந்தே வளைந்து வளராது. 

முதலில் அது நேராகவே வளரத் தொடங்குகிறது. பின்னர்தான் அதன் வடிவத்தில் மாற்றம் ஏற்படுகிறது. 

இந்த நிகழ்வுக்கு அறிவியலில் "நெகட்டிவ் ஜியோட்ரோபிசம்" (Negative Geotropism) என்று பெயர். அதாவது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக தாவரத்தின் ஒரு பகுதி வளர முயற்சிப்பதே இதன் பொருள். 

வாழைப்பழங்கள் ஒரு பெரிய குலையாக வளரும்போது, அதன் எடை காரணமாக அவை இயற்கையாகவே கீழ்நோக்கித் தொங்குகின்றன. 

இது புவியீர்ப்பு விசையின் இயல்பான விளைவு. ஆனால் வாழைப்பழங்கள் சூரிய ஒளியை நோக்கி வளர விரும்புகின்றன. அதனால், கீழ்நோக்கி இழுக்கும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக, மேல்நோக்கி வளைந்து சூரிய ஒளியை அடைய முயற்சிக்கின்றன. 

இந்த இரு விசைகளுக்கும் இடையே தொடர்ந்து நடக்கும் இயற்கையான இழுபறியின் விளைவாகவே வாழைப்பழம் மெதுவாக மேல்நோக்கி வளைந்து, அனைவரும் அறிந்த அந்த அழகான வளைந்த வடிவத்தைப் பெறுகிறது. 

வாழைத் தாவரங்கள் முதலில் அடர்ந்த காடுகளில் வளர்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு மரங்களின் இடைவெளி வழியாகக் கிடைக்கும் குறைந்த அளவிலான சூரிய ஒளியைப் பெறுவதற்காக, அவை மேல்நோக்கி வளரும் தன்மையை உருவாக்கிக் கொண்டன. 

உலகில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் வளைந்த வடிவில் இருப்பதில்லை. சில வகை வாழைப்பழங்கள் ஒப்பீட்டளவில் நேராகவும் காணப்படுகின்றன. 

ஆனால் நாம் அதிகம் சாப்பிடும் மஞ்சள் வாழைப்பழங்கள் பெரும்பாலும் சூரிய ஒளியை நோக்கி வளர்ந்ததால் வளைந்த வடிவத்தைப் பெறுகின்றன. 

எனவே, வாழைப்பழத்தின் வளைந்த வடிவம் ஒரு குறைபாடு அல்ல, அது இயற்கையின் அற்புதமான தகவமைப்பு. புவியீர்ப்பு விசையையும் சூரிய ஒளியையும் சமநிலைப்படுத்தி வளர்ந்ததற்கான அழகான சான்றுதான் நாம் தினமும் சாப்பிடும் வளைந்த வாழைப்பழம் ஆகும்.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara