Jul 8, 2026 - 05:58 PM -
0
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பார்வதி திருவோத்து. இவர் தனக்கு மனதில் பட்டத்தை பேசுபவர். அப்படி ஒரு பேட்டியில் நடிகை பார்வதி தாய்மை குறித்து பேசியுள்ளார்.
எனக்கு திருமணமும் ஆகவில்லை, குழந்தையும் இல்லை. ஒரு தரப்பினர் குழந்தையைப் பெற்று மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார்கள்.
பெண்களும் உடலளவில் பெரிய அளவில் மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு குழந்தையை பெற்றெடுப்பது பெரிய விஷயம், அதைவிட பெரிய விஷயம் அதை சரியாக வளர்ப்பது.
அந்தப் பொறுப்பை ஏற்கும் மனநிலையில் நான் இல்லை, அதனால்தான் அம்மாவாகாமல் இருப்பது தான் என்னுடைய தாய்மை என்கிறார். குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து நடிகை பார்வதி கூறிய கருத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
