Jul 9, 2026 - 07:09 PM -
0
சாமிக ஹீனடிகலவின் அசாத்தியமான துடுப்பாட்ட திறமையின் காரணமாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியை வீழ்த்தி, மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தீர்மானமிக்க போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை இளையோர் அணி கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய இளையோர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 290 ஓட்டங்களைப் பெற்றது.
இதனால் இலங்கை அணிக்கு 291 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்து, போட்டியின் வெற்றி வாய்ப்பு இலங்கையை விட்டு நழுவிக்கொண்டிருந்த வேளையில், 7-வது துடுப்பாட்ட வீரராக களம் புகுந்த சாமிக ஹீனடிகல போட்டியின் போக்கையே மாற்றியமைத்தார்.
அவரது இந்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக, 9 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குச் சென்ற இப்போட்டியை, இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் வெற்றியோடு நிறைவு செய்ய இலங்கை அணியால் முடிந்தது.
இதில் சாமிக ஹீனடிகல ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைக் குவித்தார். வெறும் 68 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவரது இந்த அதிரடி இன்னிங்ஸில் 7 நான்கு ஓட்டங்களும் 2 ஆறு ஓட்டங்களும் அடங்கும்.
சாமிகவின் இந்த ஆட்டத்திற்குப் பக்கபலமாக இருந்த செனுஜ வெக்குணகொட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ஓட்டங்களைப் பெற்றார்.
இவர்களைத் தவிர, கெத்ம விதானபத்திரண 31 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிப் பாதைக்கு வழிவகுத்தார்.
