Header Logo
Mogo Academy

செய்திகள்
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் நிறைவு

Jul 15, 2026 - 01:08 PM -

0

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் நிறைவு
Mobitel inner

வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் அகழப்பட்ட, 27.7 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

 

மகாவலி திட்டத்தின் இறுதி கட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம், வடமத்திய மற்றும் வட மாகாணங்களின் குடிநீர் மற்றும் விவசாயம் உள்ளிட்ட நீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன.

 

கடந்த 1968ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டமானது, பின்னர் 1977ஆம் ஆண்டில் ‘முடுக்கப்பட்ட மகாவலி திட்டம்’ எனும் பெயரில் மிகவும் பரந்த அளவிலும் வேகமாகவும் செயல்படுத்தப்பட்டது. 

 

அதன் இறுதி கட்டத்தின் ஒரு திட்டமாகவே, தெற்காசியாவின் மிக நீளமான இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதை வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின் கீழ் அகழப்பட்டது.

 

இதன் அகழ்வுப் பணிகளுக்காக இரண்டு TBM இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் முதற்கட்டம் 2022ஆம் ஆண்டில் அனுராதபுரம் - பலுகஸ்வெவ - மஹமீகஸ்வெவ பகுதியிலிருந்தும், இரண்டாம் கட்டம் 2023ஆம் ஆண்டில் பொலன்னறுவை - எலகஹர - கொந்துருவாவ பகுதியிலிருந்தும் ஆரம்பிக்கப்பட்டது.

 

இதன் அகழ்வுப் பணிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததை ஒட்டி, அதனைத் திருவிழாவாகக் கொண்டாடும் நிகழ்வு இன்று காலை அனுராதபுரம், பலுகஸ்வெவ பகுதியில் நடைபெற்றது.

 

27.7 கிலோமீற்றர் நீளமுடைய இந்த நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் ஊடாக, வட மாகாணத்தின் 74,000 ஹெக்டேயர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன நீர் கொண்டு செல்லப்படவுள்ளது.

 

இதன் மூலம் ஒட்டுமொத்த வறண்ட வலய மக்களும் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த குடிநீர் பிரச்சினைக்குச் சாதகமான தீர்வு எட்டப்படும். 

 

அத்துடன், சுமார் 1.5 மில்லியன் மக்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ரஜரட்ட பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்த இனம் காணப்படாத சிறுநீரக நோய்க்கும் இதுவொரு சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara