Header Logo
Mogo Academy

பல்சுவை
மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Jul 15, 2026 - 01:40 PM -

0

மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
Mobitel inner

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் மிக்சர் சாப்பிடும்போது தொண்டையில் நிலக்கடலை சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மலப்புரம் அருகே குன்னும்புரத்தில் கரட்டலுங்கல், செங்கனி, வெள்ளக்கடன் பகுதியைச் சேர்ந்த முனீர் என்பவரின் மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. 

மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும், குடும்பத்தினர் அந்த குழந்தையை உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறிய நிலையில் குழந்தை உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் அந்த குழந்தை மஞ்சேரி வைத்தியக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவனது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara