Header Logo
Mogo Academy

இந்தியா
ஓசூரில் லேசான நில அதிர்வு!

Jul 16, 2026 - 06:36 AM -

0

ஓசூரில் லேசான நில அதிர்வு!
Mobitel inner

இந்தியாவின் தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் லேசான நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய மண்டல வானிலை ஆய்வு மையத் தரவுகள் குறிப்பிடுகின்றன. 

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை - ஓசூர் பகுதிக்கு அருகிலேயே இந்த நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததோடு, இது பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த நில அதிர்வு நிகழ்வானது 'சிறிய அளவிலான நிலநடுக்கம்' என்ற வகைக்குள் அடங்குவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நில அதிர்வின் மையம் அமைந்திருந்த கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களால் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. 

இருப்பினும், இவ்வாறான சிறிய அளவிலான நில அதிர்வுகளினால் கட்டிடங்களுக்கோ அல்லது ஏனைய கட்டமைப்பு வசதிகளுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படுவதில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara