Header Logo
Mogo Academy

பல்சுவை
திருமணத்திற்குப் பின் பெண்கள் உச்சி திலகம் வைப்பது ஏன் தெரியுமா?

Jul 16, 2026 - 08:51 AM -

0

திருமணத்திற்குப் பின் பெண்கள் உச்சி திலகம் வைப்பது ஏன் தெரியுமா?
Mobitel inner

இந்து மதப் பாரம்பரியத்தில் திருமணமான பெண்களிடம் மங்கள அடையாளமாக விளங்குவது மாங்கல்யமும், நெற்றி மற்றும் தலை வகிட்டில் வைக்கும் குங்குமம் தான். "மங்கல நங்கையர் மங்கல சின்னம்" என்று போற்றப்படும் இந்த குங்குமம் வைக்கும் பழக்கத்திற்குப் பின்னால், வெறும் ஆன்மீகக் காரணங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் மருத்துவக் காரணங்களும் ஒளிந்துள்ளன. 

சாஸ்திரங்களின்படி, பெண்களின் தலை வகிடு பகுதி என்பது செல்வத்திற்கும் மங்கலத்திற்கும் அதிபதியான மகா லட்சுமி தேவியின் இருப்பிடமாகக் கருதப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண் தன் வகிட்டில் குங்குமம் இடும்போது, அந்த இல்லத்தில் லட்சுமியின் மனம் நிறைந்து, வறுமை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது ஐதீகம். 

நெற்றி மற்றும் வகிடு பகுதி மனித உடலின் ஆற்றல் மையங்களில் ஒன்றாகும். வெளியில் செல்லும்போது பிறரின் தீய எண்ணங்கள், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை அதிர்வுகள் ஒரு பெண்ணைத் தாக்காமல் இருக்க, இந்த குங்குமம் ஒரு பாதுகாப்பு கேடயமாகச் செயல்படுகிறது. 

பாரம்பரிய நம்பிக்கையின்படி, ஒரு பெண்ணின் தலை வகிட்டில் இருக்கும் குங்குமம் அவளது கணவனின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது. 

தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பெண்கள், தங்களின் கணவனின் நலனுக்காகத் திருமணத்திற்குப் பின் தினசரி தங்களின் வகிடு மற்றும் நெற்றிப் பகுதியில் குங்குமத்தை வைத்து கொள்கிறார்கள். தினமும் கணவரிடம் குங்குமம் வைப்பது குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் சீராக அமையும். 

பெண்களின் நெற்றி மற்றும் வகிடு பகுதி நெற்றிச் சுட்டி அணியும் இடம் உடலின் மிக முக்கியமான நரம்புகள் சந்திக்கும் இடமாகும். இதற்கு 'பிரம்மரந்திரம்' என்று பெயர். 

மோதிர விரலால் இங்கு குங்குமத்தை லேசாக அழுத்தி வைக்கும் போது, அந்தப் புள்ளி தூண்டப்பட்டு மன அழுத்தம், பதற்றம் மற்றும் தலைவலி குறைகிறது. 

பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் பிரசவ காலக் கட்டங்களில் ஹார்மோன் சமநிலை மிக முக்கியம். வகிடு பகுதியில் குங்குமம் வைக்கும்போது, அது மூளையின் 'பினியல்' மற்றும் 'பிட்யூட்டரி' சுரப்பிகளைத் தூண்டுகிறது. 

இது பெண்களின் ஹார்மோன் சுரப்பைச் சீராக்கி, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

திருமணமான பெண்கள் என்ன தான் புடவை கட்டி, நகைகள் அணிருந்திருந்தாலும் அழகான சிவப்பு நிறத்தில் நெற்றில் வட்டமான பொட்டு வைத்து, அதற்கு மேல் உச்சி வகுட்டில் குங்குமத்தை வைத்து தங்களது முகத்தை பார்க்கும் போது அவ்வளவு அழகாக தெரியும். 

திருமணமான பெண்களுக்கென்று தனி சிறப்பும் தனி அழகும் தரக்கூடியது குங்குமம் பெண்களின் அழகுக்கே அழகு தரக்கூடிய ஒன்றாகும். 

நெற்றி குங்குமத்தை தங்களுக்கு விருப்பமான பெண்கள் மட்டும் வைப்பது நல்லது. 

அனைவரும் குங்குமம் வைக்க வேண்டிய கண்ணயம் இல்லை.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara