Header Logo
Mogo Academy

செய்திகள்
டித்வா தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான FR மனு பரிசீலனைக்கு

Jul 16, 2026 - 10:20 AM -

0

டித்வா தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிரான FR மனு பரிசீலனைக்கு
Mobitel inner

"டித்வா" சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான பூர்வாங்கத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்காக அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கண்டிப் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அசல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பாக சட்டமா அதிபர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"டித்வா" சூறாவளி நிலைமை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான முறையான பூர்வாங்கத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசாங்கத்தின் இந்த வீழ்ச்சி காரணமாக பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். 

அத்துடன், எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும் தேவையான முறையான வழிகாட்டுதல்களை (Guidelines) அரசாங்கத்திற்கு வழங்குமாறும் அந்த மனுவின் ஊடாக மேலும் கோரப்பட்டுள்ளது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

Mobitel Upahara