Header Logo
Mogo Academy

செய்திகள்
6 கட்சிகளின் ஒன்றிணைவு எதிர்க்கட்சிகள் பிளவடைவதற்கான அறிகுறியா?

Jul 16, 2026 - 12:23 PM -

0

6 கட்சிகளின் ஒன்றிணைவு எதிர்க்கட்சிகள் பிளவடைவதற்கான அறிகுறியா?
Mobitel inner

ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயற்பட்டு வந்த 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுவானதொரு மேடையின் ஊடாக தங்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க தீர்மானித்துள்ளமையானது, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலொன்றில் பிரதான எதிர்க்கட்சி மேலும் பிளவடைவதற்கே இது வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. 

மாகாண சபைத் தேர்தலை எவ்வித தாமதமுமின்றி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் அண்மையில் பொதுவானதொரு மேடையை அமைத்து அரசாங்கத்திற்கு தங்களது அழுத்தங்களை பிரயோகித்திருந்தன. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். 

இருப்பினும், தாங்கள் இதுவரையில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருந்து விலகவில்லை என்றே அந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அத்துடன், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மாத்திரமே இவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கும் அந்தப் பிரதிநிதிகள், அரசாங்கம் தங்களது தரப்பிடம் ஏதேனும் ஆதரவைக் கோரினால் அதனைப் பரிசீலிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் தற்போது பலம் உள்ளதாகவும், அதற்கு எதிராகச் செயற்படவோ அல்லது அதனைத் தாண்டியோ செல்ல தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

தங்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து ஐக்கிய மக்கள் கூட்டணியிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு முறையான பலன் கிடைக்காததன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அந்த அரசியல் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கின்றனர். 

எவ்வாறாயினும், அண்மையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரையில் அதற்கான தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். 

நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி மற்றும் நாட்டின் அனைத்து சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக பொதுவான மேடையொன்றில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதற்குத் தங்களது கட்சிகள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் அங்கு வலியுறுத்தினார்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara