Header Logo
Mogo Academy

செய்திகள்
வெலிக்கடை சிறைக்கு செல்ல அனுமதிக்காமை - மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

Jul 16, 2026 - 03:58 PM -

0

வெலிக்கடை சிறைக்கு செல்ல அனுமதிக்காமை - மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை
Mobitel inner

வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்ற தங்களது அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காமை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடுமையான கவலையையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. 

கடந்த ஜூலை 7ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று வெலிக்கடை சிறைச்சாலையைப் பரிசோதிப்பதற்காகச் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. 

முன்அறிவித்தல் இன்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தடுப்புக் காவலில் உள்ள இடங்களுக்குள் நுழைவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் அளிக்கும் 1996ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தை, சிறைச்சாலை அதிகாரிகள் இதன் மூலம் மீறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனியவின் தலைமையில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அந்தச் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைக்குள் நிலவிய ஸ்திரமற்ற பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவே ஆணைக்குழுவின் அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அச்சந்தர்ப்பத்தில் நிலவிய உண்மையான சூழ்நிலையை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்குச் சரியாகத் தெரிவிக்கத் தவறியமை குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் அங்கு வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர். 

இருப்பினும், சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கிய இந்த விளக்கத்தில் தமக்குத் திருப்தி இல்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. 

இதைத் தவிர, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது பழிவாங்கும் நோக்கில் சித்திரவதைகளை மேற்கொள்ளல், மருத்துவ சிகிச்சைகளை மறுத்தல், கைதிகள் இருக்கும் இடங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அறிவிக்கத் தாமதித்தல் மற்றும் தண்டனைக் காலம் முடிந்த கைதிகளையும் தொடர்ந்தும் தடுத்து வைத்திருத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆணைக்குழு இதன்போது கேள்வி எழுப்பியுள்ளது. 

சிறைச்சாலைக் காவலில் உள்ளவர்களுக்கு இடம்பெற்ற சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை மற்றும் மரணங்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு, வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

இச்சம்பவத்தைக் கருத்திற்கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் பின்வரும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

தடுப்புக் காவலிலுள்ள இடங்களைப் பரிசோதிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு சட்டப்பூர்வமாக உள்ள உரிமையை உடனடியாக வழங்குதல். 

இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்துதல். 

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக அறிவித்தல். 

விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை நிறைவு செய்துள்ள கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தல்.


MOST READ

காணொளி
அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

Mobitel Upahara