Jul 17, 2026 - 06:22 AM -
0
கொடகம - பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தினால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் சிறு காயங்களுக்குள்ளான சுமார் 20 பேர் ஒருவல மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ் வண்டியில் அதன் சாரதி சிக்கிய நிலையில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரப் முயற்சிக்கு பின்னரே அவர் மீட்கப்பட்ட நிலையில் 45 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தினால் டிப்பர் வாகனத்திற்கும் பஸ் வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
