Jul 18, 2026 - 07:57 AM -
0
அலவத்துகொட, படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
வீடொன்றை அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனர்த்தத்தின் பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
