Header Logo
Mogo Academy

செய்திகள்
ரயில் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

Jul 18, 2026 - 09:49 AM -

0

ரயில் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்!
Mobitel inner

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார். 

2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த ரயில் இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த ரயில் நேர அட்டவணையின்படி, சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன. 

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது. 

இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 ரயில் இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 

எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன. 

2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது. 

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. 

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara