Header Logo
Mogo Academy

சினிமா
நீ செத்துடுவனு சாபம் விட்டவர்!

Jul 20, 2026 - 03:19 PM -

0

நீ செத்துடுவனு சாபம் விட்டவர்!
Mobitel inner

பாக்யராஜ் பற்றி சுந்தர் ராஜன் அப்படி மோசமாக பேசியது தன்னை பெரிதும் பாதித்ததாக கூறியிருக்கிறார் பார்த்திபன். மேலும் தனக்கு சாபம் விட்ட நபர் பெயரை தெரிவிக்காமல் புது தகவலும் தெரிவித்துள்ளார் அவர். 

தன் குரு பாக்யராஜ் குறித்து எஸ்.எஸ். மியூசிக்கிற்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் பார்த்திபன். அவர் கூறியதாவது, 

பாக்யராஜ் சார் இறந்துவிட்டார் என்று சாந்தனுவின் நண்பன் எனக்கு போன் செய்து சொன்னான். நைட்டு தண்ணிய போட்டுட்டு காலையில் ஏதாச்சும் சொல்றானோனு நினைத்து செல்வமணியிடம் கேட்டேன். அதன் பிறகு மருமகள் கீக்கியிடம் கேட்டப்போது ஆமாம் உண்மை என்று சொல்லிவிட்டு நீங்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்றார். வீட்டில் எந்த ஏற்பாடும் செய்யவில்லை, நீங்கள் அங்கு போய் ஆக வேண்டிய வேலையை பாருங்கள் என்றார் கீக்கி. இதையடுத்து நான் பாக்யராஜ் சார் வீட்டிற்கு ஓடினேன். 

பாக்யராஜ் சாருக்கு மாலை போடுவதை விட எது பிரமாதமாக இருக்கும் என நினைத்து ஒரு பேட், பேப்பர், பேனாவை கொண்டு சென்று அவர் உடம்பு மீது வைத்தேன். நான் எல்லா வேலையையும் செய்தது அட்டென்ஷன் சீக்கிங்காக இருக்கலாம் என ஒருவர் சொல்கிறார் என்றால் அந்த சோகத்தை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. 

பாக்யராஜ் சார் அஸ்தியை கரைத்துவிட்டு வீட்டிற்கு வந்தால் இரவு 10 மணிக்கு அவரின் உதவியாளரிடம் இருந்து மெசேஜ் வந்தது. நீ விரைவில் செத்துடுவ, ஆனால் உனக்கு கூட்டம் வராதுனு அதில் இருந்துச்சு. 

அதை பார்த்து ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் எப்படி ஒரு குடும்பஸ்தனாக இருக்க முடியும், மற்றவர்களை எப்படி பார்ப்பார்?. மெய் மறந்து வேலை செய்ததற்காக இப்படிப்பட்ட வார்த்தைகளா?. என்னை நேரில் வந்து அறைந்திருக்கலாம். 

நான் இறந்த பிறகு எனக்கு கூட்டம் வருமா, வராதானு எனக்கு எப்படி தெரியும்?. இந்த சாபம் முட்டாள்தனமாக இருக்கிறது. 

உங்களுக்கு சாபம்விட்டது யாரென்று சொல்லுங்கள் பேத்துடுவோம் என்றார்கள் என் உதவியாளர்கள். அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு 10 சேனல்களில் என்னை பற்றி தவறாக பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

அந்த மெசேஜை அனுப்பியது யாரென்று தனக்கு தெரியாதது போன்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை. அவர் என்னை பற்றி நிறைய குறைகள் சொல்லியிருக்கிறார். துணை முதல்வர் படத்தை தொகுத்து வழங்க வருகிறேன் என சொல்லிவிட்டு அந்த பார்த்திபன் வரவில்லை என்றார். என் முன்னாள் மனைவி சீதா அந்த படத்தில் நடித்திருந்தார். 

அவர் வருவது தெரிந்ததால் நான் வரவில்லை. நாங்கள் சகஜமாக பிரிந்து போன தம்பதி கிடையாது. அதனால் நான் வரல சார் என்று இயக்குநரிடம் சொன்னேன். 

எங்க டைரக்டருக்கு நெருங்கிய நண்பராக இருந்தாலும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவரை பற்றி மோசமாக பேசினார். பாக்யராஜ் என் வாழ்க்கையை கெடுத்துவிட்டான் என அந்த பேட்டியில் சொன்னார் சுந்தர்ராஜன். 

நாங்கள் இருவரும் ஒன்னா வந்து தான் முயற்சி செய்தோம். ஒரு நாள் சொல்லாமல் கிளம்பிவிட்டான். நான் நன்றாக வந்துவிடுவேனோ என்கிற பயத்தில் விட்டுட்டு போயிட்டான். அந்த கோபம் எனக்கு இருந்தது. 

நான் இயக்குநராக ஆன பிறகே கோபம் தீர்ந்தது என்றார். இப்படிப்பட்ட ஒரு ஆளிடம் நிரந்தர தலைவர் பாக்யராஜ் என்று எப்படி கேட்பது என்று தோன்றியது. அவர் இப்போ பத்து இடத்துல கேமரா முன்பு என்னை பற்றி பேசுகிறார் என்றார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

Mobitel Upahara