Jul 21, 2026 - 12:22 PM -
0
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இன்று (21) காலை இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தற்போதும் தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீ பரவத் தொடங்கிய தருணத்தில் அங்கிருந்த சிலரை நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
தான் அங்கிருந்த சிலரை ஒரு வாயில் வழியாக வெளியே அழைத்து வந்ததாகவும், மேலும் சிலர் பின்புற வாயில் வழியாக வெளியேறியிருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர்களைப் பற்றித் தேடிப் பார்ப்பதற்காகத் தான் அப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் ஊடகங்கள் முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.
