Jul 21, 2026 - 01:59 PM -
0
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்குப் புதிய நோட்டிஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட தேர்தல் வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பான மேல் நடவடிக்கைகளுக்காகவும், முதல்வர் விஜய்யின் தரப்பில் அளிக்கப்படும் பதிலுக்காகவும் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
