Header Logo
சினிமா
ஓடிடியில் ஜன நாயகன் எப்போது?

Jul 31, 2026 - 01:21 PM

ஓடிடியில் ஜன நாயகன் எப்போது?
Mobitel inner

விஜய்யின் ஜன நாயகன் இந்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி வெளியாகி இருந்தால் இந்நேரம் அமேசான் பிரைம் ஓடிடியிலேயே அந்த படம் பழைய படமாக மாறியிருக்கும். ஆனால், படம் வெளியாக பல தடைகள் உருவாகியதும் மொத்தமும் லீக் ஆன நிலையில், அமேசான் பிரைம் ஜன நாயகன் படத்தை ஓடிடியில் திரையிடும் முடிவை கைவிட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சுமார் 110 கோடி ரூபாயை விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனுக்கு கொடுக்க அமேசான் பிரைம் நிறுவனம் முன் வந்தது. ஆனால், பல மாதங்களாக படம் ரிலீஸ் ஆகாத நிலையில், அந்த டீல் வாபஸ் பெறப்பட்டது என்கின்றனர். 

தற்போது ஜீ5 ஓடிடி தளம் தான் ஜன நாயகன் படத்தை சுமார் 50 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை அது தொடர்பாகவும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தளபதி வெற்றிக் கொண்டானாக விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் உலகளவில் 260 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே 300 கோடி வசூலை ஜன நாயகன் கடக்கும் என்கின்றனர். 

இந்த வாரமும் அடுத்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிதாக படங்கள் வெளியாகாத நிலையில், ஜன நாயகன் நின்று ஓடும் என்கின்றனர். 

ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வெளியான நிலையில், ஓடிடியில் படம் எப்போது வரும் என்றும் வீட்டில் உள்ள குட்டீஸ்கள் எல்லாம் விஜய் படத்தை பார்க்க வேண்டும் என வெறித்தனமாக காத்திருக்கும் சூழலில் ஆகஸ்ட் 14 ஆம் திகதி அதிகபட்சமாக ஜன நாயகன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜீ5 ஓடிடி தளத்தில் ஜன நாயகன் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். 

ஆகஸ்ட் 14 ஆம் திகதி மிஸ் ஆனால், ஆகஸ்ட் 20 அல்லது 21 ஆம் திகதி வெளியாகி விடும் என்கின்றனர். கேவிஎன் தயாரிப்பில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஓடிடியில் ஜன நாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara