Header Logo
பல்சுவை
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?

Jul 31, 2026 - 01:39 PM

இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
Mobitel inner

வீட்டில் உள்ள பெரியவர்கள் இரவில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன, இது மூடநம்பிக்கையா அல்லது நடைமுறை காரணமா என்பதைப் பற்றி பார்க்கலாம். 

சிலர் இதை மூடநம்பிக்கை என்று கூறினாலும், பழங்காலத்தில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் நகம் வெட்டும்போது காயம் ஏற்படும் அபாயம் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. 

முற்காலங்களில் மின்சார விளக்குகள் இல்லாததால், எண்ணெய் விளக்கு போன்ற மங்கலான வெளிச்சத்தில்தான் இரவில் நகம் வெட்ட வேண்டியிருந்தது. இதனால் தவறுதலாக விரல்களில் காயம் ஏற்பட வாய்ப்பு இருந்தது. 

மேலும், நகத் துண்டுகள் தரை, படுக்கை அல்லது சோஃபாவில் விழுந்தால் அழுக்கு மற்றும் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உணவு தயாரிக்கும் அல்லது சாப்பிடும் இடங்களில் நகம் வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. 

படுக்கை அல்லது சோஃபாவில் அமர்ந்து நகம் வெட்டும்போது, நகத் துண்டுகள் துணி அல்லது போர்வையில் விழக்கூடும். எனவே, நகம் வெட்டும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 

இரவில் நகம் வெட்டக்கூடாது என்பதற்கு ஆன்மிகம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. பழங்கால பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளே இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். 

எப்போது நகம் வெட்டலாம்? நல்ல வெளிச்சம் இருக்கும் நேரத்தில் நகம் வெட்டுவது பாதுகாப்பானது. முன்பும், பிறகும் கைகளை சுத்தம் செய்து, காகிதம் அல்லது துணி விரித்து, நெயில் கிளிப்பர் பயன்படுத்தி நகங்களை வெட்டுவது நல்லது.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara