Header Logo
சினிமா
ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!

Aug 1, 2026 - 10:30 AM

ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!
Mobitel inner

சின்ன திரை நடிகை பரமேஸ்வரி ரெட்டி இளம் வயதில் சொந்தமாக சொகுசுக் கார் வாங்கியுள்ளார். தமிழில் ஒரு தொடரில் மட்டுமே நடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து தனிப் பாடல்களில் நடனமாடியதன் மூலம் சொந்தமாக கார் வாங்கியுள்ளார். 

சமீபத்தில் தனது கனவு இல்லத்தை கட்டி முடித்து, தாய் தந்தைக்கு அதனை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். புதுமனை புகுவிழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டன. 

சொந்த வீடு கட்டி முடித்த சில நாள்களில் சொந்தமாகக் கார் வாங்கியுள்ள பரமேஸ்வரிக்கு சின்ன திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. இத்தொடரில் வெண்பா, பரமேஸ்வரி ரெட்டி, தீபக், ஜெய்பாலா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வந்தனர். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குறுகிய காலமே ஒளிபரப்பாகியிருந்தாலும், டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முதன்மைத் தொடர்களில் ஒன்றாக மனசெல்லாம் இருந்தது. 

இத்தொடரில் தீபக் - பரமேஸ்வரி தம்பதிக்கு இடையிலான காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இவர்களின் காதல் காட்சிக்கு இணையத்தில் ரசிகர்கள் ஏராளம். 

தெலங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், இத்தொடருக்குப் பிறகு தமிழில் வேறு எந்தவொரு தொடரில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு மொழியில் தனிப் பாடல்களில் தோன்றினார். 

இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் ஒளிபரபான நம்பர் ஒன் கோடாலு என்ற தொடரில் துணைப் பாத்திரத்தில் பரமேஸ்வரி நடித்திருந்தார். 

ஒரு தொடரில் மட்டுமே நடித்திருந்தாலும் சொந்தமாக வீடு கட்டி, தற்போது கார் வாங்கும் அளவுக்கு பரமேஸ்வரி உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara