Header Logo
சினிமா
ஸ்பைடர்மேன் 2 நாட்களில் 2600 கோடி வசூல்

Aug 1, 2026 - 04:47 PM

ஸ்பைடர்மேன் 2 நாட்களில் 2600 கோடி வசூல்
Mobitel inner

‘ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே’ படம் இரண்டு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் கடந்த ஜூலை 31ம் திகதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. 

இதில் டாம் ஹொலண்ட் கதாநாயகனாகவும், ஜெண்டாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். 

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. 

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்பட வரிசையில் நான்காவது படமாக வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு சென்று வருகின்றனர். 

புதிய எதிரிகள், விறுவிறுப்பான அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளால் உலகம் முழுவதும் இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

வெளியாகிய முதல் நாளிலேயே ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் இந்தியாவில் சுமார் ரூ.72 கோடி மொத்த வசூலைக் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

இதன்மூலம், இதுவரை இந்தியாவில் ஹொலிவுட் திரைப்படங்களில் அதிக முதல் நாள் வசூல் என்ற சாதனையை வைத்திருந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. 

முதல் நாளிலேயே இந்திய வசூலில் புதிய உச்சத்தை எட்டியுள்ள ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ இந்திய திரையரங்கு வரலாற்றில் ஹொலிவுட் திரைப்படங்களின் முதல் நாள் வசூலில் புதிய மைல்கல்லை படைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ படம் இரண்டு நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 2,600 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்தியாவில் இரண்டு நாட்களில் ரூ. 131 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.


MOST READ

காணொளி
மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

மக்களுக்கு நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது!

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

Mobitel Upahara