Header Logo
விளையாட்டு
பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு இடையே கடும் முரண்பாடு!

Aug 6, 2026 - 10:21 AM

பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு இடையே கடும் முரண்பாடு!
Mobitel inner

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம்: இந்தியத் தேர்வுக் குழு மற்றும் பிசிசிஐ இடையே கடும் முரண்பாடு இந்தியக் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்பில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் (BCCI), அணித் தேர்வுக் குழுவிற்கும் இடையே கடும் முரண்பாடுகள் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் போதே இந்த முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவை இணைத்துக்கொள்ளும் திட்டம் தங்களிடம் இல்லை எனத் தேர்வுக் குழுவினர் அவருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரோஹித் சர்மாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து தேர்வுக் குழுவினர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளமையே இதற்குக் காரணமாகும். 

எனினும், பிசிசிஐ இந்த விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. கடந்த இங்கிலாந்துத் தொடரின் போது ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா ரோஹித் சர்மாவுக்குப் பகிரங்கமாகத் தனது ஆதரவை வெளியிட்டிருந்தார். 

பிசிசிஐயின் இந்தச் செயற்பாட்டினால், தேர்வுக் குழுவினர் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தனது ஓய்வு மற்றும் உலகக் கிண்ண வாய்ப்பு குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இங்கிலாந்துக்கு எதிரான லோட்ஸ் (Lord's) மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாகத் துடுப்பெடுத்தாடினார். அவர் 110 பந்துகளில் 138 ஓட்டங்களைக் குவித்து தனது திறமையை மீளவும் நிரூபித்திருந்தார். 

இந்த விவகாரத்தின் காரணமாக, பிசிசிஐ உயர் பீடத்திற்கும், தேர்வுக் குழுவிற்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, தற்போதைய தலைமைத் தேர்வாளரான அஜித் அகர்கரின் பதவிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக முன்னாள் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மனை நியமிக்க பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முரண்பாடுகள் மற்றும் அஜித் அகர்கரின் எதிர்காலம் தொடர்பான இறுதி முடிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பிசிசிஐயின் வருடாந்தப் பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உத்தியோகபூர்வமாக எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு'

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

எல் நினோவை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்!

வனஜீவராசிகள் அதிகாரிகளால் மீட்பு!

வனஜீவராசிகள் அதிகாரிகளால் மீட்பு!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

Mobitel Upahara