Aug 6, 2026 - 08:29 PM
6ஆவது தெரண சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழாவின்தொடக்க நிகழ்வு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டல் வளாகத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
6ஆவது தெரண சிக்னல் கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா ஓகஸ்ட் 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடாத்துவதற்கு தற்போது அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதில் பங்குபற்றுவதற்காக 30 நாடுகளைச் சேர்ந்த 80 சர்வதேச பட்டக் கலைஞர்கள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கையின் தனித்துவம், கலாசாரம் மற்றும் அழகை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில், குறித்த பட்டக் கலைஞர்கள் நேற்று கண்டி நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு ஸ்ரீ தலதா மாளிகையைத் தரிசித்த அவர்கள், உலக பௌத்த வரலாற்று அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.

