Header Logo
செய்திகள்
ஓகஸ்ட் மாதத்தின் கடந்த 6 நாட்களில் 3,175 டெங்கு நோயாளர்கள்

Aug 7, 2026 - 06:22 PM

ஓகஸ்ட் மாதத்தின் கடந்த 6 நாட்களில் 3,175 டெங்கு நோயாளர்கள்
Mobitel inner

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்படி, இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

தற்போது வரை நாடு முழுவதும் டெங்கு நோயினால் 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மரண வீதம் 0.07% ஆகப் பதிவாகியுள்ளது.

 

மேலும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் ஆறு நாட்களில் மட்டும் 3,175 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

 

ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஜூலை மாதத்தில் 29,973 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

மொத்த நோயாளர்களில் 52.96% (46,885 பேர்) மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தென் மாகாணம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.

 

மாவட்ட ரீதியில் பார்க்கும் போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர் (18,832 பேர்).

 

 இதர மாவட்டங்களின் விவரம்:

 

கொழும்பு மாவட்டம்: 17,568 நோயாளர்கள்

கண்டி மாவட்டம்: 6,228 நோயாளர்கள்

 

மேலும், நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிடாயப் பகுதிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

செம்மறி என்று கூறுவது பிழை!

செம்மறி என்று கூறுவது பிழை!

Mobitel Upahara