Aug 11, 2026 - 05:42 PM

கடனுறுதிக் கடிதங்கள் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், இறுதி சுங்கத் தீர்வை வழங்க மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் தீர்வொன்றைப் பரிந்துரைப்பதற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவாவிடம் வினவியபோது அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
குறிப்பிட்ட வாகன இறக்குமதி தொடர்பில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவற்றுக்கு பொருத்தமான இணக்கப்பாட்டை எட்டுவதற்குத் தேவையான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்.













