Aug 11, 2026 - 07:18 PM

ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை 65,202 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 13,483 ஆகும்.
இரண்டாவதாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 7,460 ஆகப் பதிவாகியுள்ளது.
மூன்றாவதாக பிரான்ஸிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 5,388 ஆகும்.
இதேவேளை, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 351,713 ஆகும்.
இது தவிர, பிரித்தானியாவில் இருந்து 137,861 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 92,940 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.













