Aug 14, 2026 - 08:50 AM

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 கிலோவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.























