Aug 16, 2026 - 05:47 PM

22வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்துவதுடன், தாம் தனிப்பட்ட ரீதியிலும் ஜனாதிபதிக்கு இது குறித்து அறிவிக்கவுள்ளதாகக் கோட்டை கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் கலாநிதி இத்தேபானே தம்மாஸங்கார நாயக்க மாஹிமிபானன் தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் சுதந்திர செயல்பாட்டு மையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று, 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான சமர்ப்பணங்களை விளக்கமளிப்பதற்காக அவரைச் சந்தித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பன்னிப்பிட்டிய, ருக்மலேயில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.























