Aug 24, 2026 - 08:36 AM





இந்திய அணியின் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐசிசியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (23) கொழும்பில் ஆரம்பமானது.
இதில் இந்திய அணியின் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களைப் பெற்ற போது ஆட்டமிழந்து வௌியேறிய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் அசித பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்டார்.
குறித்த சந்தர்ப்பத்தில் தனஞ்சய டி சில்வா அவர்களை விலக்குவதற்கு முற்பட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் ஜெய்ஸ்வாலின் தலைக்கவசம் அசித பெர்னாண்டோவின் நெற்றியில் உரசும் அளவிலான உடல்ரீதியான மோதல் ஏற்பட்டது.
இதனால் ஐசிசி விதிகளின் படி 2.12-வது பிரிவின் நிலை 1 கீழ், அவருக்குப் போட்டி கட்டணத்தில் 50% வரை அபராதமும், 1 அல்லது 2 குறைமதிப்புப் புள்ளிகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் போட்டி நடுவர் என்டி பைகிராஃப்ட் (Andy ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.























