Aug 25, 2026 - 10:56 AM





ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சரிகமப. அதில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாத்துறையிலும், கச்சேரிகளில் பாடியும் வருகிறார்கள்.
அந்தவகையில் இலங்கை தமிழனாக சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் சபேசன்.
தனக்கென ரசிகர்களை கொண்டிருந்த சபேசன், அந்த சீசனில் 2 ஆவது இடத்தை பிடித்து 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை பெற்றார்.
இந்நிலையில் சபேசன் ரிக்ஷானா என்பகரை திருமணம் செய்துள்ளார். பல ஆண்டுகள் காதலித்து வருவதாக சரிகமப மேடையில் கூறியிருந்த சபேசன் திருமண புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்து பலரது வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.























