Header Logo
SLIC
செய்திகள்
தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

Aug 25, 2026 - 12:35 PM

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார்.

 

இது தொடர்பான மரண விசாரணை நேற்று (24) அன்று கம்பளை வைத்தியசாலையில் நடைபெற்றபோதே இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

 

வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.

 

சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

 

கடந்த ஓகஸ்ட் 23 அன்று இரவு 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டின் சன்னல்படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தைத் தண்ணீர் என நினைத்து அச்சிறுமி குடித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வவுனியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் அன்றைய தினம் மாலையில் வீட்டின் வெளிப்புறத்தில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது, சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் இருந்த அந்த இரசாயன திரவத்தைக் குடித்துள்ளார்.

 

இது தொடர்பாக தொழுவ பிரதேச செயலகப் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் வர்ணரத்ன முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளித்த சிறுமியின் தந்தையான ஜே. விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:

 

"எங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான். உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோதுதான் இந்தத் துயரம் நடந்தது. மகள் அந்த திரவத்தைக் குடித்தவுடனேயே அவளது வாயிலிருந்து உமிழ்நீர் நுரைத்து வெளிவந்தது. நான் வெளியே இருந்தபோது வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து எனக்கு விடயத்தைக் கூறினார்கள். நாங்கள் உடனடியாக பன்விலதென்ன வைத்தியசாலைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றோம். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர் கூறிவிட்டார்" என வேதனையுடன் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

Mobitel 1278