Header Logo
SLIC
உலகம்
நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!

Sep 1, 2026 - 11:11 AM

நேபாள பேரிடர் பலி எண்ணிக்கை 962 ஆக அதிகரிப்பு!
Mobitel Inner 1278
EDEX Inner

நேபாள வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண் ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது. அங்கே நீர்மின் நிலையங்களில் சிக்கிய 933 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

நேபாளத்தில் இமயமலை பிராந்தியத்தில் உற்பத்தியாகி தெற்கு நோக்கி பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை முற்றிலும் நிர்மூலமாக்கி இருக்கிறது. வீதிகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள், தொலைபேசி கோபுரங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் வெள்ளத்துக்கு இரையாகி உள்ளன. 

மேலும் ஆற்றின் போக்கில் உள்ள நகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் அங்கு வசித்த மக்கள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் அங்கு இருந்து சுற்றுலா சென்றிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கிறார்கள். 

இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்திருப்பது அடுத்தடுத்து மீட்கப்படும் உடல்கள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. 

அந்தவகையில் நேற்று (31) நூற்றுக்கும் மேற்பட்டோரின் உடல்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டன. இதன்மூலம் இந்த பேரிடருக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. 

அப்பர் திரிசூலி-1 மற்றும் லாங்டாங் கோலா பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் சிக்கியிருந்த 279 பேர் மீட்கப்பட்டனர். 

இந்த பணிகளில் நேபாள இராணுவ என்ஜினீயர்கள் நவீன தளவாடங்களுடன் மீட்புப்பணிகளை 24 மணி நேரமும் மேற்கொண்டு வருகின்றனர். இதில் அப்பர் திரிசூலி-3ஏ பகுதியில் மட்டும் 90 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளதாக நேபாள பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே திபெத்திலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 550 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடந்து வருகின்றன. 6 நாட்களாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் இதுவரை 9,500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 

இதில் இந்தியா, சீனா, ரஷியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் கணிசமாக மீட்கப்பட்டு உள்ளனர். 

நேபாள பேரிடர் நிகழ்ந்து 6 நாட்களை கடந்த பின்னரும் சுமார் 4,500 பேரின் கதி என்ன? என்று தெரியாததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278