Header Logo
Vallibel FD
செய்திகள்
இலங்கை - இந்திய பாதுகாப்பை மேலும் மேம்படுத்த உறுதி

Sep 10, 2026 - 06:18 AM

இலங்கை - இந்திய பாதுகாப்பை மேலும் மேம்படுத்த உறுதி
Mobitel Inner 1278

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நேற்று (9) விஜயம் மேற்கொண்டார். 

அமைச்சின் வளாகத்தை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை, பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர வரவேற்றார். 

அதனைத் தொடர்ந்து அவருக்கு இலங்கை இராணுவத்தின் பாரம்பரிய முறைப்படி அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. 

இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நெருக்கமான உறவுகள் மற்றும் இருதரப்புப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து வலியுறுத்தினார். 

குறிப்பாக சவாலான மற்றும் அவசர காலங்களில் இலங்கைக்காக இந்தியா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவிற்கும் உதவிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் கௌரவமான நன்றியையும் அவர் இங்கு வெளிப்படுத்தினார். 

இலங்கை வழங்கிய சிநேகபூர்வமான வரவேற்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் பிரிக்க முடியாத உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் பாதுகாப்பு மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார். 

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளரும் மேலதிக செயலாளருமான (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) இந்திகா விஜேகுணவர்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முப்படைகளின் தளபதிகள் உட்பட பாதுகாப்பு அமைச்சு மற்றும் இந்திய தூதுக்குழுவின் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

Mobitel 1278