Sep 17, 2026 - 06:06 PM

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி, ரஞ்சி டிராபியில் மகராஷ்டிரா அணிக்காக விளையாடி வந்தார்.
இதனிடையே பிரித்வி ஷா, தன்னுடைய காதலி அக்ரிதி அகர்வாலுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தத்தை முடித்து புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், நிச்சயதார்த்தம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில், பிரித்வி ஷாவை பிரிவதாக கூறி அக்ரிதி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில், நாங்கள் இருவரும் இணைந்து கனத்த இதயத்துடன் எங்கள் நிச்சயதார்த்தத்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இருவரின் எதிர்கால இலக்குகளும், அதற்கான பாதைகளும் வெவ்வேறாக இருக்கிறது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இந்த கடினமான சூழலில் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் அக்ரிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.





























