Sep 30, 2024 - 11:18 AM -
0
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் வெளிவாரியாக சாதாரண தரப் பரீட்சையில் 8 A மற்றும் B சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கார்த்திகேயன் ஷயனுஜன் என்ற மாணவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
கடந்தாண்டு பத்தாம் தரத்தில் கல்வி பயின்று வந்திருந்த நிலையில் 2023-2024ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சதாரண பரீட்சையில் வெளிவாரியாக பரீட்சையை எழுதியிருந்தார்.
இந்நிலையில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகியிருந்தன.
இதில் குறித்த மாணவன் 8 A சித்திகளையும் 1 B சித்தியையும் பெற்று ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.