செய்திகள்
அரசியலில் நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Oct 3, 2024 - 01:55 PM -

0

அரசியலில்  நிராகரிக்க முடியாத தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

 

தமிழ்த் தேசிய அரசியலில் இன்று நிராகரிக்க முடியாத ஒரே ஒரு தரப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியே உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் தொகுதி செயற்ப்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று (02) மாலை மாங்குளம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி தேர்தல் மாவட்ட பிரதான வேட்ப்பாளர் தவபாலன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வன்னி தேர்தல் தொகுதி வேட்ப்பாளர்கள் வன்னி தேர்தல் தொகுதியின் செயற்ப்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு சமகால அரசியல் நிலைமைகள் எதிர்வரும் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு வன்னி தேர்தல் தொகுதியில் தேர்தலுக்காக பணியாற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05