Oct 8, 2024 - 03:14 PM -
0
தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருகையில்,
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இல்லாத நிலையில் தனது 22 வயது மகளுக்கு திருமணம் முடித்து வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றதுடன் தனது தாயார் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவதினமான 6 ஆம் திகதி இரவு மகளின் கணவரான மருமகன் 16 பேர் கொண்ட குழு ஒன்றுடன் வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்து மாமியாரை இருவர் அமரத்தி பிடிக்க அவரை மருமகன் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையிட்டு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் நேற்று (07) இரவு பொலிஸ் நிலையயத்தில் முறைபாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மருமகன் அவரது குழுவான 16 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
--