Oct 15, 2024 - 03:48 PM -
0
"விழியின் இழப்பு வாழ்வின் இழப்பல்ல எங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்போம் " எனும் தொணிப்பொருளில் உலக வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி ஒன்று கிளிநொச்சியில் இன்று (15) முன்னெடுக்கப்பட்டது. கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு பேரணி 155 ஆம் கட்டையிலுள்ள விழிப்புலனற்றோர் சங்கம் வரை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பேரணியில் விழிப்புலனற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
--