Oct 19, 2024 - 07:34 AM -
0
மகளிர் உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதன்படி, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இதற்கமைய மகளிர் உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி டுபாயில் இடம்பெறவுள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.