Oct 19, 2024 - 10:03 AM -
0
10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.