Oct 22, 2024 - 03:17 PM -
0
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2024 வருடாந்திர கூட்டத் தொடர் இந்த நாட்களில் அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி. இல் நடைபெற்று வருகிறது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கை பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், இலங்கையில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், IMF-ன் அனுசரணை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட கடின வெற்றிகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டினார்.
இலங்கை மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை ஜோர்ஜீவா இதன்போது வலியுறுத்தினார்.