Oct 23, 2024 - 04:07 PM -
0
மாத்தறை - ருவன்வெல்ல பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி வழங்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (22) மாலை கெஸ்பேவ பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டதுடன், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கெஸ்பேவ, கோனமடித்த வீதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இச்சந்தேக நபரிடம் இருந்து கிடைத்த தகவலின் பிரகாரம் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல் ரக துப்பாக்கி, 13 தோட்டாக்கள், கார் மற்றும் வேன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.