கிழக்கு
கற்பிட்டி விபத்தில் ஒருவர் பலி

Oct 23, 2024 - 10:41 PM -

0

கற்பிட்டி விபத்தில் ஒருவர் பலி

கற்பிட்டி-பாலாவி பிரதான வீதியின் தேத்தாப்பொல சந்தியில் இன்று (23)  காலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்தள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பாலாவி - பொத்துவில் பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஆர்.பீ.டைடஸ் பர்னாந்து (வயது-44) குடும்பஸ்தர் ஒருவரே ஸ்தலத்தில் மரணமானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

கற்பிட்டியில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்றும் புத்தளத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்களுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மரணமானவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப்பின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

--

Comments
0

MOST READ
01
02
03
04
05