Oct 23, 2024 - 11:39 PM -
0
கம்பளை பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி, இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இன்று (23) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை ஒன்றுக்காக காரில் வருவதற்காக 20,000 ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.