வடக்கு
மன்னார் மாவட்டத்தில் கடும் மழை!

Oct 25, 2024 - 04:15 PM -

0

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை!

மன்னார் மாவட்டத்தில் நேற்று (24) காலை வரை பெய்து வந்த கடும் மழையின் காரணமாக 1,898 குடும்பங்களைச் சேர்ந்த 7,023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னார் மாவட்ட செயலகம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05