Oct 25, 2024 - 05:08 PM -
0
கடந்த மே மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் முதல் தடவையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று 12,500 புள்ளிகளை கடந்தது.
அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்றைய தினம் 44.08 புள்ளிகளால் அதிகரித்து 12,517.58 என்ற புள்ளியில் நிறைவடைந்துள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 4.75 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.