Oct 26, 2024 - 08:35 PM -
0
எதிர்காலத்தில் சிறந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்காக, பொருளாதார ஆலோசகர் உட்பட நிதி அமைச்சின் அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் இன்று (26) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.