Oct 29, 2024 - 02:27 PM -
0
ஜனசக்தி குழுமம் (JXG), மார்பு புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தமது ஊழியர்கள்
மத்தியில் நலனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார பராமரிப்பு
சேவைகளை வழங்கும் ஆசிரி ஹெல்த் உடன் கைகோர்த்து வெபினார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வை இராணுவ வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை ஆலோசனை வைத்தியரான தாத்தியா டி
சில்வா முன்னெடுத்திருந்தார். இந்த அமர்வை ஏற்பாடு செய்ததை முன்னிட்டு ஜனசக்தி குழுமம்
பெருமை கொள்வதுடன், தனது ஊழியர்கள் மத்தியில் மார்பு புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவது மற்றும் பணியிடத்தில் நேர்த்தியான மனநிலையை ஊக்குவிப்பது போன்றவற்றை
இலக்காகக் கொண்டு இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. நேர்த்தியான ஈடுபாடு மற்றும் சமூக
ஈடுபாடு போன்றவற்றுக்கு ஜனசக்தி குழுமத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில்
இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களின் பிரகாரம், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பெண்கள்
மத்தியில் மார்பு புற்றுநோய் என்பது அதிகளவில் காணப்படும் புற்றுநோயாக அமைந்துள்ளது. 2021
ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் பிரகாரம், பெண்களில் ஏற்பட்டிருந்த
புற்றுநோய்களில் மார்பு புற்றுநோய் 27% ஆக காணப்பட்டதாகவும், மொத்தமாக 5485 பேர்
பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களிலிருந்து 124 புதிய மார்பு
புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். சுகாதார அமைச்சின் ஆய்வின் பிரகாரம், மார்பு
புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளமை
கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் என்பது, “மார்பு புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” என உலகளாவிய ரீதியில்
அனுஷ்டிக்கப்படுவதுடன், ஒவ்வொரு வருடமும் இந்த விடயம் தொடர்பில் ஊழியர்கள் மத்தியிலும்,
பரந்தளவு சமூகத்தாரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜனசக்தி குழுமம் முயற்சிகளை
மேற்கொண்ட வண்ணமுள்ளது.
ஜனசக்தி குழுமத்தின் பிரதம குழும மனித வளங்கள் அதிகாரி வசந்தி ஸ்டீபன் கருத்துத்
தெரிவிக்கையில், “JXG ஊழியர்கள் மத்தியில் மார்பு புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வை
ஏற்படுத்தி, ஆதரவளிப்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். அதனூடாக எமது ஊழியர்கள் மற்றும்
பரந்தளவு சமூகத்தின் நலன் தொடர்பில் நாம் காண்பிக்கும் அக்கறை மீள உறுதி செய்யப்படுகின்றது.
பெறுமதி வாய்ந்த வளங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலமாக, தவிர்ப்பு மற்றும் ஆரம்ப
நிலையில் இனங்காணல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை எமது ஊழியர்கள் மத்தியில் மேம்படுத்தி
ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றோம். தனிநபர் சுகாதாரத்தில் மாத்திரம் எமது செயற்பாடுகள் கவனம்
செலுத்துவது மாத்திரமன்றி, தேசிய விழிப்புணர்வு முயற்சிகளிலும் பங்களிப்பு செய்கின்றன.
அதனூடாக மார்பு புற்றுநோய் தொடர்பில் புரிந்துணர்வு மற்றும் ஆதரவளிக்கும் கலாசாரத்தை
கட்டியெழுப்பும் தேசிய விழிப்புணர்வூட்டல் முயற்சிகளிலும் பங்களிப்பு வழங்குகின்றது. அறிவு மற்றும்
ஈடுபாடு பெருமளவில் காணப்படும் சூழலை ஏற்படுத்த ஒன்றிணைந்து நாம் முயற்சிப்பதுடன்,
அதனூடாக பணியிடத்துக்கு அப்பால் முழுத் தேசத்துக்கும் அனுகூலமளிக்கும் சுகாதாரத்துக்கான எமது
அர்ப்பணிப்பை உறுதி செய்கின்றோம்.” என்றார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “JXG இல், புற்றுநோய் தொடர்பில் காணப்படும் மூட நம்பிக்கைகளை
இல்லாமல் செய்ய நாம் எதிர்பார்ப்பதுடன், தனிநபர்கள் தமது அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை
பகிர்ந்து கொள்ளக்கூடிய திறந்த உரையாடல்களை ஊக்குவிக்கின்றோம். சவால்கள் நிறைந்த
நோயிலிருந்து மீண்டு வருவது பற்றி ஒருவருக்கு ஒருவர் ஆறுதலளிப்பது தொடர்பில் கவனம்
செலுத்துகின்றோம். மார்பு புற்றுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த நாம் எம்மை
அர்ப்பணித்துள்ளதுடன், குறிப்பாக அதனை தவிர்த்தல் மற்றும் ஆரம்ப நிலையில் இனங்காணல்
தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம். இலங்கையில் பெண்கள் மத்தியில் இந்த நோய் அதிகளவில்
காணப்படும் நிலையில் இது மிகவும் முக்கியமான செயற்பாடாகும். நிதிசார் துறையில் மூன்று தசாப்த
காலப்பகுதிக்கு மேலான அனுபவத்தைக் கொண்ட பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும்
வகையில், சகல நிலைகளிலும் ஊழியர் ஈடுபாட்டை உயர்ந்த மட்டத்தில் பேணுவதற்கு எம்மை
அர்ப்பணித்துள்ளோம். அத்துடன் நாம் சேவையாற்றும் சமூகங்களில் உயர்ந்தளவு நேர்த்தியான
பங்களிப்பை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
JXG இன் தொனிப்பொருளான Stronger Together, Stronger Than Ever” என்பதற்கமைய, ஜனசக்தி
இன்சூரன்ஸ், ஃபஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் மற்றும் ஒரியன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி ஆகியன
அடங்கலான, குழுமத்தின் சகல வியாபார அலகுகளுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஒன்றிணைந்த முயற்சிகளினூடாக, சகல ஊழியர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு மற்றும் அறிவை
மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், எமது நிறுவனத்தில் வளர்ச்சி மற்றும் வலுவூட்டலில்
ஒன்றிணைந்த கலாசாரத்தை கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
JXG பற்றி (ஜனசக்தி குழுமம்)
JXG (ஜனசக்தி குழுமம்) காப்புறுதி, நிதியியல் மற்றும் முதலீட்டு வங்கியியல் துறைகள் போன்றவற்றில்
பிரசன்னத்தைக் கொண்ட நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமாக அமைந்துள்ளது. குழுமத்தின்
பிரதான வியாபாரம் ஒவ்வொன்றும், அவற்றின் துறைகளில் ஒப்பற்ற முன்னோடியாக அமைந்துள்ளது.
ஜனசக்தி குழுமத்தில் ஃபஸ்ட் கெப்பிட்டல், ஜனசக்தி லைஃப், ஒரியன்ட் ஃபினான்ஸ் மற்றும் ஜனசக்தி
மையம் ஆகியன அடங்கியுள்ளன.
JXG இன் செயற்பாடுகள் 1990 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தவிசாளர் எமெரிடஸ் திரு. சி.ரி.ஏ.
ஷாப்டர் அவர்களால் இலங்கையின் முதலாவது விசேடத்துவம் வாய்ந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக
ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், தொழிற்துறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய
பங்காற்றியிருந்தது. கடந்த தசாப்த காலங்களில், மூலோபாய ஒன்றிணைவுகள் மற்றும்
கையகப்படுத்தல்களினூடாக, ஜனசக்தி குழுமம் விரிவாக்கமடைந்திருந்தது.
வர்த்தக நாமத்தில் காணப்படும் X என்பதனூடாக, வாய்ப்புகள், விரிவாக்கம் மற்றும் சிறந்த வளர்ச்சி
ஆகியன வெளிப்படுத்தப்படுகின்றன. ஒன்றிணைந்த நிறுவனமாக காணப்படும் வாய்ப்புகளை
உணர்த்துகின்றது. “Stronger Together, Stronger Than Ever” எனும் தொனிப்பொருளினூடாக,
ஒற்றுமை மற்றும் திரண்ட வலிமை போன்றவற்றுக்கான JXG இன் அர்ப்பணிப்பு
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.